You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவில் கொலை
மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து படுகொலையாக இருக்கலாம் என தோன்றுகின்ற தாக்குதல் ஒன்றில், வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின், பிரிந்து வாழும் ஒன்றுவிட்ட சகோதரன் கொல்லப்பட்டுள்ளார்.
மக்கௌவுக்கு செல்ல விமானத்தை பிடிப்பதற்கு செல்லும் வழியில் திங்கள்கிழமை கிம் ஜோங் நாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மலேசிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில், அவர் இறப்பதற்கு முன்னால், பின்னால் இருந்து தாக்கப்பட்டதாகவும், அவருடைய முகத்தின் மீது திரவம் தெளிக்கப்பட்டதாகவும் கிம் ஜோங் நாம் கூறியுள்ளார்.
அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களின் மத்தியில், அவருடைய இறப்புக்கான காரணத்தை அறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
நாடு கடந்து வாழ்ந்து வந்த கிம் ஜோங் நாம், வட கொரிய முகவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாக நம்புவதாக அமெரிக்க அரசு வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்