You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா: பல்மைராவின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் அழிப்பு
சிரியாவின் முற்கால நகரான பல்மைராவின் பெரும் பகுதியை இஸ்லாமிய அரசு குழுவினர் அழித்துவிட்டதாக சிரியாவின் உயரிய தொல்பொருள் ஆய்வு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ட்ரடிரிபைலோன் என்று அறியப்படும் நான்கு வாயில்கள் உடைய ரோமன் கட்டடக்கலை அமைப்பையும், ரோமன் அமைப்பில் இருக்கும் அரைவட்ட அரங்கின் தோற்றத்தையும் இந்த தீவிரவாதிகள் உடைத்துவிட்டதாக மாமௌன் அப்துல்காரிம் தெரிவித்திருக்கிறார்.
ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்ற இந்த இடிபாடுகள் உடைய நகரத்தை,.டிசம்பர் மாதம் ஐ.எஸ். குழு, சிரியா அரசு படைப்பிரிவுகளிடம் இருந்து இதனை மீண்டும் கைப்பற்றியது
சமீபத்தில் பல்மைராவில் நடைபெற்றுள்ள அழிவை புதியதொரு போர் குற்றம் என்றும், சிரியா மக்களுக்கும், மனித குலத்திற்கும் மிக பெரிய இழப்பு என்றும் யுனெஸ்கோ கண்டித்திருக்கிறது.
முன்னதாக, பல்மைரா நகரத்தை தாங்கள் கைபற்றியிருந்தபோது, பல புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களை ஐ.எஸ் அழித்துவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்