கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

கேதர்நாத் அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விமானி உட்பட அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர். மோசமான வானிலையால் விபத்து நடந்ததாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி கூறினார்.

இறந்தவர்களில் ஆறு பேர் யாத்ரீகர்கள். கேதார்நாத்திலிருந்து குப்தகாஷிக்கு அதிகாலை 5:30 மணியளவில் புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு