இலங்கையில் இந்திய பிரதமர் மோதி - இன்று என்ன நடந்தது?
இலங்கையில் இந்திய பிரதமர் மோதி - இன்று என்ன நடந்தது?
2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கொழும்புவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோதிக்கு, இலங்கை அரசின் கௌரவ விருதான ஸ்ரீலங்கா மித்ர விபூஷண விருது வழங்கப்பட்டது. மேலும் இரு நாடுகளிடையே ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் இல்லத்திலும் வரவேற்பு வழங்கப்பட்டது
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



