சூடாகும் உதகை: வறண்ட அணைகள், பூமிக்குள் வெடிக்கும் காரட் - காணொளி
நீலகிரி மாவட்டம் உதகையில் 38 ஆண்டுகளுக்குப்பின் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வறட்சியும், அதீத வெப்பநிலையும் காய்கறிகள் சாகுபடி, காட்டுயிர்ச்சூழல், சுற்றுலா என ஒட்டுமொத்த நீலகிரியையும் கடுமையாக பாதித்துள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான உதகையில், ஆண்டு முழுவதிலும் குளிர் நிலவுவதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆண்டு முழுவதிலும் குளிர் நிலவுவதால், இங்கு தேயிலை சாகுபடியும், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. சுற்றுலா, தேயிலை மற்றும் காய்கறிகள் சாகுபடி நீலகிரியின் அடையாளங்களாக உள்ளன.
உதகையை பொறுத்தவரையில் ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகவும், கோடை காலங்களில் குறைந்தபட்சமாக 12 டிகிரி முதல் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரையிலும் நிலவும் என்கிறது வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரம்.
இப்படியான நிலையில், இந்தாண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உதகையில் 29 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பிபிசி கள ஆய்வில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகள் என்ன? இந்த வெப்பநிலைக்கான காரணம் என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



