You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடாவில் தமிழர்கள் சீக்கியர்களுக்கு நிகராக முக்கியத்துவம் பெறுகிறார்களா?
அரசியல் ரீதியில் பார்த்தால் கடந்த சில ஆண்டுகளில், கனடாவில் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக தமிழர்கள் மாறிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். டொரோன்டோ, ஆன்டோரியோ, ஆல்பெர்டா போன்ற பல மாகாணங்களில் தமிழர்கள் கூட்டாக ஒரே பகுதியில் வசித்து வருவதுடன், அந்தப்பகுதிகளில் அரசியல் மட்டுமின்றி, அரசு இயந்திரத்திலும் தமிழர்கள் கோலோச்சி வருகின்றனர்.
கனடா மத்திய அரசாங்கத்தில் இரண்டு தமிழர்கள், முக்கிய இரண்டு அமைச்சு பதவிகளை வகித்து வருகின்றமையானது, கனடாவில் தமிழர்களின் ஆதிக்கத்திற்கு சிறந்த உதாரணமாக இருக்கும். இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கெரி ஆனந்தசங்கரி ஆகியோரே இவ்வாறு கனடா மத்திய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்து வருகின்றனர்.
இவர்களுக்கு எல்லாம் முன்பு கனடாவின் முதல் மக்களவை உறுப்பினராக, ராதிகா சிட்சபைசன் தேர்வாகினார். அதேபோன்று, மாகாண மற்றும் நகர அரசியலிலும் இலங்கை மற்றும் இந்திய நாடுகளை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள், தமது பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்