You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கேரளாவின் முதல் ஃபெமினிஸ்ட் ராணி பற்றி தெரியுமா?
கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1920களின் நடுப்பகுதியில் ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது, 'கல்லூரிக்குச் செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் ராணியுடன் அவரது அரண்மனையில் தேநீர் அருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.'
இந்த அறிவிப்பு திருவிதாங்கூர் சமஸ்தான பெண்களிடையே பெரும் உற்சாகத்தையும் கல்லூரிக்குச் செல்வதற்கான ஆர்வத்தையும் தூண்டியது. காரணம், அந்த ராணி அப்போது கேரளாவின் பிரபலமான நபராக இருந்தார். அவரது பெயர் கேரளா முழுக்க பரவியிருந்தது.
சுதந்திரத்திற்கு முந்தைய கேரளாவின் 'திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை' 7 ஆண்டுகள் (1924- 1931) ஆட்சி செய்த ராணி சேது லக்ஷ்மி பாயி, தன் இறுதிக்காலத்தில் ஒரு சாதாரண மூதாட்டியாக பெங்களூரில் வாழ்ந்து, மறைந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு