You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி அரேபியாவில் மோதிய ரொனால்டோ, மெஸ்ஸி - அனல் பறந்த அதிரடி ஆட்டம்
சௌதியில் நடந்த போட்டி, இரு சூப்பர்பவர்களும் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டியாக இருக்கக்கூடும் என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறின. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக அதிரடி ஆட்டம் இருந்தது.
ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தும், இறுதியில் மெஸ்ஸி ஆடிய பி.எஸ்.ஜி அணியே 5-4 என்ற கணக்கில் வெற்றியைக் கைப்பற்றியது. சௌதியின் தலைநகரான ரியாத்தில் நட்புரீதியிலான போட்டி என்றாலும், இத்தகைய வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும் என்பதால், அதற்கு எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது.
மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே என்று பி.எஸ்.ஜி அணியில் ஆடிய பலரும் நட்சத்திர ஆட்டக்காரர்கள். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மெஸ்ஸி தனது முதல் கோலை ஸ்கோர் செய்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்