You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துபை முன்பு இந்தியாவின் பகுதியாக இருந்த வரலாறு தெரியுமா?
கடந்த 1956ஆம் ஆண்டு குளிர்காலத்தில், தி டைம்ஸ் நிருபர் டேவிட் ஹோல்டன் பஹ்ரைன் தீவுக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில், பிரிட்டிஷ் அரசின் கீழ் பஹ்ரைன் தீவு இருந்தது.
புவியியல் ஆசிரியராக சில காலம் பணிபுரிந்த டேவிட் ஹோல்டன், அரேபியாவில் பணியமர்த்தப்படுவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். ஆனால், இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணி நியமிக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தர்பாரில் கலந்துகொள்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
துபை, அபுதாபி மற்றும் ஓமன் என வளைகுடா நாடுகளில் அவர் சென்ற இடமெல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவின் எச்சங்களை அவரால் காண முடிந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு