மோக்கா புயல்: கடந்த 20 ஆண்டுகளில் பங்களாதேஷ் கண்ட மோசமான புயலா?

மோக்கா புயல்: கடந்த 20 ஆண்டுகளில் பங்களாதேஷ் கண்ட மோசமான புயலா?

மோக்கா புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று நண்பகலில் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடந்தது.

இன்று நண்பகல் மோக்கா கரையைக் கடந்த போது, அப்போது வங்கதேசம் - மியான்மர் இடையே உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

மோக்கா புயல் அச்சுறுத்தலால் தென்கிழக்கு வங்கதேசத்தில் சுமார் 5 லட்சம் பேர் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.

மோக்கா புயல் கரையைக் கடக்கும் போது 170 கி.மீ. வேகத்தல் பலத்த காற்று வீசும், வங்கக்கடலில் 12 அடி உயரம் வரை அலை எழும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: