You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தவெக தலைவர் விஜய் கவனமாக இருக்க வேண்டுமென திருமாவளவன் கூறியது ஏன்?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பான தகவல்கள் பரவுவது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசிய திருமாவளவன், “அது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை. சேர்ந்த பிறகுதான் தெரியும். அவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறாரா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் சூது, சூழ்ச்சி இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.”
“நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவருடைய கட்சியில் சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஏற்கெனவே ஊடுருவி இருக்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் இருக்கின்றன. மேன்மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குள்ளாகும் என்பது என் கருத்து” எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு