You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘ஹமாஸ் கடத்திச் சென்ற எங்கள் குடும்பத்தாரை மீட்டு வாருங்கள்’ - இஸ்ரேலிய மக்கள் கோரிக்கை - காணொளி
ஹமாஸ் குழுவினரால் கடத்தப்பட்டவர்களை காலம் கடத்தாமல் மீட்க அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாத நிலை இருப்பதாக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
உடனடியாக ஒரு ஒப்பந்தம் செய்து அவர்களை உடனடியாக கூட்டி வர வேண்டும் என்று கூறுகின்றனர்.
பணயக் கைதிகளில் மிகச்சிறியவரான ஒரு கைக்குழந்தை தனது நான்கு வயது சகோதரன் மற்றும் தாயுடன் கடத்தப்பட்டார். போர் நிறுத்தத்தின் போது குழந்தைகளைப் திருப்பி அனுப்பியது ஹமாஸ். ஆனால் அந்தக் குழந்தை வரவில்லை. தாயும் இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக ஹமாஸ் தெரிவிக்கிறது.
ஆனால் இஸ்ரேல் ராணுவம் இதை உறுதி செய்யவில்லை. பணயகதிகளில் 130 பேர் இன்னும் இஸ்ரேல் திரும்பவில்லை, அவர்களில் 30 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)