You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூன்று வயது மகனுக்கு தனது கல்லீரலை தானமாக கொடுத்த தாய்
நேபாளத்தை சேர்ந்த சீதா பட்டா தனது மூன்று வயது மகன் ரிஷவுக்கு தன் கல்லீரலை தானமாக வழங்கியுள்ளார்.
22 மாத குழந்தையாக இருந்த போது ரிஷவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. பக்தபூரில் உள்ள மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் அவனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தனது வீட்டை விற்று 30 லட்சம் செலவு செய்து தனது மகனின் சிகிச்சையை செய்து வருகின்றனர் இந்த பெற்றோர்கள். பலரும் குழந்தையை கைவிட்டுவிட சொன்ன போதிலும் தொடர்ந்து மனஉறுதியுடன் போராடி வருகின்றனர்.
நேபாள வரலாற்றில் ஒரு மூன்று வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதன்முறை. தற்போது இந்த குழந்தையின் சிகிச்சைக்கான செலவினை நன்கொடை மூலம் ஈடுசெய்ய முயற்சித்து வருகின்றனர் இந்த பெற்றோர்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)