"என் கணவரின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்" - வியட்நாமில் தற்கொலை செய்த தமிழர் மனைவி

"என் கணவரின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்" - வியட்நாமில் தற்கொலை செய்த தமிழர் மனைவி

இலங்கைக்குத் திரும்ப முடியாது எனக் கூறி வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்ற யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு 13 வயதாகிறது.

கடைசி குழந்தையின் வயது நான்கு மாதங்கள் என்று அவரது உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இலங்கையில் நான்கு பிள்ளைகளை வைத்து வளர்க்க முடியாத சூழலே தனது கணவர் கனடாவுக்கு செல்லக் காரணமென்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: