You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பெண் கண் இமைகளில் இருந்த 250 பேன்களை மருத்துவர் அகற்றியது எப்படி?
குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்னை ஒன்று அண்மையில் பதிவானது.
சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென் கண் மருத்துவரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் ஒன்றிரண்டு அல்ல, மொத்தம் 250 பேன்கள் மற்றும் 85 ஈர்கள் இருந்துள்ளன.
வெளிச்சம் பட்டால் பேன்கள் இருக்கும் இடத்தில் இருந்து நகர்ந்துவிடும் என்பதாலும், மருத்துவ அறிவியலின் சில வரம்புகள் இருப்பதாலும், பேன்களை அகற்றும் சிகிச்சை இரண்டு மணிநேரம் நீடித்தது.
இந்த சிகிச்சை எப்படி நடந்தது என்பதை விளக்குகிறது இந்த காணொளி.
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு