எரிந்த நூலகம்; அணையாத நினைவுகள்
1981-ம் ஆண்டு மே 31-ம் திகதி யாழ். நூலகம் எரிக்கப்பட்டது.
அந்தச் சம்பவம் இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நூலகத்தின் எரிப்பு ஆயுதப் போராட்டம் மேலும் தீவிரமடைவதற்கும் காரணமாகவும் அமைந்தது.
யாழ்ப்பாண நூலகத்தின் எரிப்பு தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாட்டின் மீது நேரடியாக நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
நூலகம் எரிக்கப்பட்டபோது யாழ். மாநகரசபையின் ஆணையாளராகவும் நூலகத்தின் பொறுப்பதிகாரியாகவும் இருந்த, தற்போதைய வடக்கு மாகாணசபையின் தற்போதைய அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் பிபிசி தமிழோசையுடன் பகிர்ந்துகொண்ட நினைவலைகளை நேயர்கள் கேட்கலாம்.