இந்தியா v வங்கதேசம் என்ன நடந்தது?
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
இவ்விருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தனர்.
ரோகித் ஷர்மா அபாரமாக விளையாடி சதமடித்தார். 92 பந்துகளில் ஏழு பௌண்டரி ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் 104 ரன்கள் எடுத்தார் ரோகித் ஷர்மா.
கே.எல்.ராகுல் 92 பந்துகளில் ஆறு பௌண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்திய அணித் தலைவர் 26 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமலும் முஸ்தாபிசுர் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பந்த் அதிரடியாக ஆடினார்.ஆனால் அரை சதமடிப்பதற்குள் ஆட்டமிழந்தார்.
இந்தியாவின் நடுவரிசை வீரர்கள் சிறப்பாக செயல்படாததால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் எட்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.
வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வங்கதேச அணி சேஸிங் செய்யும்போது ஷகிப் மற்றும் சைஃபுத்தீன் மட்டும் அரை சதமடித்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆட வில்லை.
குறிப்பாக ஏழாவது விக்கெட்டுக்கு சபீர் - சைஃபுத்தீன் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளையும் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.