நன்றி நேயர்களே...
இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.
இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- மேரியோபோல் அரங்கத்தில் நடைபெற்ற தாக்குதலில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- யுக்ரேன் தலைநகர் கீயவின் கிழக்குப்பகுதியில் இழந்த நகரங்களையும் தற்காப்பு நிலைகளையும் யுக்ரேன் படைகளால் மீட்க முடிந்ததாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று யுக்ரேன் -போலாந்து எல்லைக்கு செல்லவிருப்பதாகவும் அங்கு அவர் யுக்ரேன் அகதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
- திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டுள்ளது
- கார்கீவில் உள்ள மருத்துவ மையம் ஒன்றில், ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும், உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
- மேரியோபோல் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகளாகும் என மேரியோபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
- ரஷ்யா யுக்ரேனில் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ “எதிர்வினையாற்றும்” என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எவ்வாறு அதற்கு எதிர்வினையாற்றும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
- ரஷ்யாவின் போர் அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய நாடுகள் தாமதமாக எதிர்வினையாற்றியதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்றார்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.
பிபிசிதமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.














