ஜெயக்குமாரின் பிணை மனு தள்ளுபடி: சென்னை நீதிமன்றம்

தேர்தல் விதிகளை மீறியதாகவும் வன்முறையை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மறுத்து விட்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நிறைவடைகிறது இன்றைய நேரலை பக்கம். இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...

    இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • இந்தியாவில் பயங்கரவாத வழக்குகளில் தேடப்படும் நபரான தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
    • தேர்தல் விதிகளை மீறியதாகவும் வன்முறையை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மறுத்து விட்டது.
    • 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    • தமிழகத்தில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக உயர்ந்துள்ளது.
    • செஸ் போட்டியில் உலக சாதனை படைத்த சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
    • அஜித் நடித்து பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஹாஷ்டாகுகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கிள் உள்ளன..
  2. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா: சென்னை சிறுவனை பாராட்டிய பிரதமர் மோதி

    பிரக்ஞானந்தா

    பட மூலாதாரம், PRAGGNANANDHAA R./ FACEBOOK

    படக்குறிப்பு, பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாய்

    செஸ் போட்டியில் உலக சாதனை படைத்த சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.

    ஆன்லைனில் நடந்துவரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனைசென்னையை சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா தோற்கடித்திருக்கிறார்.

    தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்த கார்ல்சன், கறுப்புக் காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தாவின் 39 நகர்வுகளில் வீழ்ந்தார்.

    அனைத்து வகையான செஸ் வடிவங்களிலும் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

    பிரக்ஞானந்தாவை தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோதி, “பிரக்ஞானந்தா வெற்றி அடைந்ததில் நாம் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளோம். முக்கியமான உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து வெற்றியடைந்ததில் பெருமை அடைகிறேன். திறமை வாய்ந்த பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. அஜித்தின் 'வலிமை' நாளை ரிலீஸ்: உற்சாகத்தில் ரசிகர்கள்

    நடிகர் அஜித்

    பட மூலாதாரம், AJITH

    அஜித் நடித்து பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஹாஷ்டாகுகள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன.

    'வலிமை' திரைப்படம் வெளியீடு தாமதம் ஆனது ஏன் என்பது குறித்து இங்கே படியுங்கள்:

  4. பாலியல் உடல்நலம்: 'ஃபேன்டசி செக்ஸ்' எனப்படும் பாலியல் கற்பனைகள் திருமண உறவை பாதிக்குமா?

    பெண்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    துணையுடன் பாலுறவு கொள்ளும்போது வேறொருவரையோ, வேறொரு சூழலையையோ கற்பனை செய்து கொள்வது பலருக்குப் பிடிக்கும். இதை ஃபேன்டசி செக்ஸ் என்கிறார்கள்.

  5. உணவும் உடல்நலமும்: சரியான நேரத்தில் உண்ணவில்லை என்றால் என்ன நடக்கும்?

    உணவு

    பட மூலாதாரம், GETTY IMAGES

    ஆரோக்கியமான உணவு என்று வரும்போது, நம் தட்டில் உள்ளவற்றில் கவனம் செலுத்துகிறோம். ஆனால், நாம் எப்போது சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமா?

  6. யுக்ரேன் Vs ரஷ்யா: புதினின் முடிவால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படுமா?

    விளாடிமிர் புதின் - நரேந்திர மோதி

    பட மூலாதாரம், NARENDRA MODI

    யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான நெருக்கடி கடுமையாக தீவிரமடைந்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கிழக்கு யுக்ரேனி எல்லைக்கு உள்பட்ட இரண்டு பிரிவினைவாத ஆதிக்கம் நிறைந்த பகுதிகளை அவற்றின் தன்னாட்சி மிக்க பிரதேசங்களாக அங்கீகரித்துள்ளார்.

    "இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்" என்று யுக்ரேன் நெருக்கடி தொடர்பாக நடந்து வரும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

    புதினின் முடிவால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படுமா? என்பதை இக்கட்டுரையில் படியுங்கள்:

  7. இந்திய வரலாறு: ஆங்கிலேயர்களால் ஆடை களையப்பட்டு முகலாய இளவரசர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கதை

    பகதூர் ஷா ஜாஃபர்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, இறுதியாக எடுக்கப்பட்ட பகதூர் ஷா ஜாஃபரின் படம்

    வரலாற்றில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?

    உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 29வது கட்டுரை இது.

  8. தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

    கொரோனா

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, கொரோனா

    தமிழகத்தில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,47,006 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 10,782 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

    இன்று குணமடைந்தோரின் எண்ணிக்கை: 2,153

    மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை: 33,98,231

    இன்று தனியார் மருத்துவமனையில் ஒருவர், அரசு மருத்துவமனைகளில் 3 பேர் என, 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

    கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை: 37,993

    இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 63,267

    இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை: 62,549

    தமிழகத்தில் அரசு சார்பாக 69 மற்றும் தனியார் சார்பாக 266 என, மொத்தம் 335 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

  9. மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது: காங்கிரஸ் விமர்சனம்

    நவாப் மாலிக்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட நவாப் மாலிக்

    இந்தியாவில் பயங்கரவாத வழக்குகளில் தேடப்படும் நபரான தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா சிறுபான்மை துறை அமைச்சருமான நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ள நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

    நவாப் மாலிக் கைது செய்யப்பட்டதற்கு பின்னர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, "என் மீதான வழக்குகளுக்கு அஞ்ச மாட்டேன். போராடி வெல்வேன்," என ஊடகங்களை நோக்கிப் பேசினார் நவாப் மாலிக்.

    இந்த நிலையில், நவாப் மாலிக் கைது நடவடிக்கையை மகாராஷ்டிரா அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் விமர்சித்துள்ளார். இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் கூட.

    "இது தரம் தாழ்ந்த அரசியல். விசாரணை முகமைகளை பயன்படுத்துவது நல்லதல்ல," என அவர் தெரிவித்தார்.

    இதேவேளை, மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் படீல், நவாப் மாலிக் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    கடந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கு ஒன்றில், பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது, தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் இயக்குநரும் அவ்வழக்கின் விசாரணை அதிகாரியுமாக இருந்த சமீர் வான்கடே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நவாப் மாலிக் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தார். இதையடுத்து, அமேத வழக்கின் விசாரணையிலிருந்து சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டார்.

  10. குடும்பத்தின் 700 ஆண்டு பாரம்பரியம்: கவாலி இசை பாடும் 11 வயது சிறுவன்

    இந்தப் பள்ளி மாணவர் வாலி, இளம் வயதிலிருந்தே மேடைகளில் கவாலி இசையில் பாடி வருகிறார். மேலும், தொடர்ச்சியாக இசைக்குழுவின் ஒத்திகையிலும் ஈடுபடுகிறார்.

    "எனது இரண்டு வயதில் இருந்தே கவாலி பாடத் தொடங்கினேன். இதை என் தந்தை மற்றும் உறவினர்களிடம் இருந்து கற்றேன். எனக்கு இது பிடித்துள்ளது.

    என் குடும்பத்தின் 700 வருட பாரம்பரியத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, நான் கவாலி பாடகர் ஆக விரும்புகிறேன்," என்கிறார் வாலி.

    காணொளிக் குறிப்பு, கவாலி இசையில் பாடும் இளம் பாடகராக 11 வயது சிறுவன்
  11. நீருக்கடியில் ஓர் உலகம்: இந்த ஆண்டின் சிறந்த அண்டர்வாட்டர் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

    சிறந்த 'அன்டர் வாட்டர்' புகைப்படம்

    பட மூலாதாரம், RAFAEL FERNANDEZ CABALLERO/UPY2022

    படக்குறிப்பு, சிறந்த 'அன்டர் வாட்டர்' புகைப்படம்

    மாலத்தீவில் கடலுக்கடியில் 5 திமிங்கலங்கள் ஒன்றாக இணைந்து உண்ணும் காட்சியை புகைப்படமாக எடுத்தஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் பெர்னான்டஸ் கேபல்யோரோ, நீருக்கடியில் புகைப்படங்கள் எடுக்கும் இந்தாண்டுக்கான சிறந்த புகைப்பட கலைஞராக தேர்வாகியுள்ளார். இந்த விருது, பிரிட்டனில் 1965 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருதுக்கு தேர்வான மற்ற சில புகைப்பட கலைஞர்களின் அதிசயிக்கத்தக்க புகைப்படங்கள் இதோ...

    பின்லாண்டை சேர்ந்த பெக்கா டூரி எடுத்த தவளைகளின் கூட்டம்

    பட மூலாதாரம், PEKKA TUURI/UPY2022

    படக்குறிப்பு, பின்லாண்டை சேர்ந்த பெக்கா டூரி எடுத்த தவளைகளின் கூட்டம்.
    ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் ஹெக்மேன் நீருக்கடியில் எடுத்த புகைப்படம்

    பட மூலாதாரம், THOMAS HECKMANN/UPY2022

    படக்குறிப்பு, ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் ஹெக்மேன் நீருக்கடியில் எடுத்த புகைப்படம்
    ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் கெர்ரி புர்ரோ எடுத்த புகைப்படம்

    பட மூலாதாரம், KERRIE BUROW/UPY2022

    படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் கெர்ரி புர்ரோ எடுத்த புகைப்படம்
  12. 5 வாக்குகள் பெற்ற அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி

    ராமஜெயம்
    படக்குறிப்பு, ராமஜெயம்: கோப்புப்படம்

    கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் 5 வாக்குகள் பெற்ற நிலையில், அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் தேர்வுநிலை பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ராமஜெயம் தான் போட்டியிட்ட வார்டில் அதிக வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவருக்கு 5 வாக்குகளே கிடைத்த தகவலையறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் மனமுடைந்து இருந்த ராமஜெயம் வீட்டிற்கு வந்து யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த நச்சு மருந்தை அவர் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

  13. கர்நாடகாவில் இந்து செயல்பாட்டாளர் கொலை: என்ஐஏ விசாரிக்க வலியுறுத்தல்

    ஹர்ஷா

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, ஹர்ஷா (கோப்புப்படம்)

    கர்நாடகாவில் இந்து ஆர்வலர் கொலை வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    கர்நாடகாவின் ஷிவமோகா நகரில் பிப்ரவரி 20ஆம் தேதி இரவு, ஹர்ஷா சீகஹள்ளியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியே சென்றபோது, 26 வயதான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த இந்து செயல்பாட்டாளர் ஹர்ஷா, அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அங்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது. இறுதி ஊர்வலத்தின் போது வன்முறையும், தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அராகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, கர்நாடகாவில் ஆளும் பாஜகவின் ஒரு தரப்பு வலியுறுத்தி வருகிறது. இவர்களுள் கர்நாடகா அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, மத்திய இணையமைச்சர் ஷோபா கரண்ட்லஜே ஆகியோரும் அடக்கம்.

    காவல்துறை விசாரணையின் அடிப்படையில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும் என, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்ததாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    ஷிவமோகா நகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது தங்கள் அரசின் முதன்மையான பணி எனவும் அவர் தெரிவித்தார்.

    “இக்கொலை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் வெளிவரும் தகவல்கள் அடிப்படையில் இதுகுறித்து எந்த விசாரணை முகமை விசாரிக்கும் என்பது முடிவு செய்யப்படும். காவல்துறை முதலில் விசாரிக்க நாம் வாய்ப்பு வழங்க வேண்டும்” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

  14. ரஷ்யா - யுக்ரேன் நெருக்கடி: அடுத்தடுத்த திருப்பங்கள்

    யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு, “அடுத்த 24 மணிநேரத்தில் நிகழும்” என, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் எச்சரித்துள்ளார். ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடியில் நேற்று நடந்தது என்ன என்பதை இக்காணொலியில் காணுங்கள்:

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  15. மு.க. ஸ்டாலின் சொல்லும் 'திராவிட மாடல்' ஆட்சி - இது உண்மையில் எப்படியிருக்கும்?,

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், MKSTALIN

    படக்குறிப்பு, 2016இல் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி கட்சியின் செயல் திட்ட அறிக்கையை வெளியிடும் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி (கோப்புப்படம்)

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியை தங்களது ஒன்பது மாத கால 'திராவிட மாடல்' ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 'திராவிட மாடல்' என முதல்வர் குறிப்பிடுவது ஏன்?

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை

    காஜா முகமது
    படக்குறிப்பு, காஜா முகமது: கோப்புப்படம்

    4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய கடந்த பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காஜா முகமது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, சிறுமியின் தாய் இவர் மீது புகார் கொடுத்திருந்தார்.

    அதன் பேரில் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காஜா முகமது கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ மற்றும் பாலியல் துன்புறுத்தல் சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சுபத்திரா, 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த காஜா முகமதுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் சாகும் வரை சிறை தண்டனையும் விதித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்குமாறும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

  17. பிஹாரில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 31 பேர் கைது

    பீகார்

    பட மூலாதாரம், SEETU TIWARI

    படக்குறிப்பு, கைது செய்யப்பட்டோர்

    பிஹார் மாநிலம் நவாடா மாவட்டம், பாக்ரி பரவான் வட்டத்தில் அமைந்துள்ள தல்போஷ் கிராமத்தில், சைபர் குற்றத்தில் ஈடுபட்டதாக 31 பேரை பிப். 15 அன்று போலீசார் கைது செய்தனர். இதில், 2 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள்.

    15 முதல் 40 வயதுடைய குழுவினரிடம் 46 செல்பேசிகள், 3 மடிக்கணினிகள், போலி முத்திரைகள், பல நிறுவனங்களின் தரவுத்தாள்கள் போன்றவை இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    “இணைய மோசடிகள் மூலம் இவர்கள் பணம் வசூலித்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது தவிர, பொருளாதார குற்றப்பிரிவு, உள்ளூர் காவல் நிலையத்திடம் இருந்து தகவல்களை பெற்று விசாரித்து வருகிறது” என காவல்துறை துணை கண்காணிப்பாளர் முகேஷ் குமார் சாஹா தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட பெரும்பாலானோர், விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

    இது தொடர்பாக பிபிசி இந்தி களநிலவரத்தை அறிய அங்கு சென்றபோது, கைது செய்யப்பட்ட பலரின் குடும்பத்தினர் பலரும், கைது செய்யப்பட்டவர்கள் இத்தகைய குற்றங்களில் ஈடுபடவில்லை என தெரிவித்தனர். அவர்களில் பலர் வறுமையான நிலையில் இருப்பதும் தெரியவந்தது.

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும்: உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Reuters

    யுக்ரேனில் அவசரநிலையை பிரகடனம் செய்ய அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

    இந்த கவுன்சிலின் கூட்டம் நடந்து முடிந்த பின், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஓலேக்சி டனிலோஃப் பேசுகையில், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் யுக்ரேனிய படைகள் போர் புரிந்துவரும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் தவிர, அனைத்து பகுதிகளிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் என தெரிவித்தார்.

    முதல் கட்டமாக, இந்த அவசரநிலை 30 நாட்களுக்கு நீடிக்கும் என அவர் கூறினார்.

    எனினும், இந்த நடவடிக்கைக்கு யுக்ரேன் அரசு நாடாளுமன்றத்தில் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும்.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனு தள்ளுபடி: சென்னை நீதிமன்றம்

    ஜெயக்குமார்
    படக்குறிப்பு, ராயபுரம் 49ஆவது வார்டில் பிடிபட்ட நபரை அரை நிர்வாணமாக்கி அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக அழைத்து வரும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்

    தேர்தல் விதிகளை மீறியதாகவும் வன்முறையை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிக்கு பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது, சென்னை ராயபுரம் 49ஆவது வார்டில் நடமாடிய திமுக பிரமுகரை கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி, அரை நிர்வாணமாக்கி ஊர்வமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில், ஜெயக்குமாரை அவரது இல்லத்தில் வைத்து சென்னை காவல்துறை நேற்று முன்தினம் இரவு கைது செய்தது.

    இந்த வழக்கில் ஜெயக்குமாரை மார்ச் 9ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதேபோல, கள்ள ஓட்டு போட வந்த நபரை பிடித்துக் கொடுத்தும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறி, தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக, ஜெயக்குமார் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இதில் திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயக்குமாரை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவரது சார்பில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தபோது, காவல்துறை தரப்பில் சாலை மறியல் செய்யப்பட்ட வழக்கிலும் ஜெயக்குமார் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜாமீனில் வெளி வரக்கூடியவையே என்று வாதிட்டார்.

    இருப்பினும், அரை நிர்வாணமாக்கப்பட்ட நரேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவ நாளில் அமைச்சர் பதவி வகித்த ஒருவரே வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளார், அவரை ஜாமீனில் விடுவித்தால் தமது கட்சிக்காரரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறினார்.

    காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டுகளுடன் கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார். மேலும், கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, தாவூத் இப்ராஹிம் தொடர்பான பண மோசடி வழக்கு: மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது

    நவாப் மாலிக்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட நவாப் மாலிக்

    இந்தியாவில் பயங்கரவாத வழக்குகளில் தேடப்படும் நபரான தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    தாவூத் இப்ராஜிம் மற்றும் நிழல் உலக குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுடனும் தொடர்புடைய பண மோசடி வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, இன்று நவாப் மாலிக்கை கைது செய்துள்ளது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    இந்நிலையில், நவாப் மாலிக் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, அவரது அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பயப்பட மாட்டோம், தலைகுனிய மாட்டோம்! 2024க்கு தயாராக இருங்கள்” என பதிவிடப்பட்டிருந்தது.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2