பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி அபார வெற்றி

மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மாநில முதல்வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருமான மம்தா பானர்ஜி அபார வெற்றிபெற்றுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் வெல்லாமதபோதும் அவர் முதல்வர் பதவியேற்றிருந்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவுபெறுகிறது.

    புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இத்தாலியில் கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்: 8 பேர் பலி

    இத்தாலியிலுள்ள மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விமானம் ஆளில்லாத கட்டடம் ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது.

    மிலனின் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் சர்தீனியா தீவை நோக்கி பயணித்தைத் தொடங்கியது.

    ஆனால் கிளம்பிய சற்று நேரத்திலேயே மிலன் நகரின் புறநகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது.

    Milan plane crash

    பட மூலாதாரம், EPA

  3. பாஜக அமைச்சர் மகன் கார் மோதியதால் விவசாயிகள் இறந்ததாக குற்றச்சாட்டு

    உத்தர பிரதேச மாநிலம் லக்மிபூர் கேரி மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் இரண்டு விவசாயிகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

    லக்மிபூர் கேரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் அரவிந்த் சௌரேசியா இந்தத் தகவலை பிபிசி இந்தி செய்தியாளர் சமீரத்மாஜ் மிஸ்ராவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    உயிரிழந்தவர்களில் இருவர் கார் ஒன்று மோதி உயிரிழந்தனர் என்றும் அவர்கள் பயணித்த வாகனம் கவிழ்ந்ததால் மூவர் உயிரிழந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாஜக அமைச்சர் மகன் மற்றும் உறவினர்கள் கார் மோதியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர் என்று விவசாயிகள் அமைப்பு தெரிவிக்கிறது.

    uttar pradesh farmers death

    பட மூலாதாரம், skm

  4. பவானிபூரில் மம்தா பானர்ஜி அபார வெற்றி

    மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி சுமார் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருப்பதாக பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

    58,835 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அபார முன்னிலை வகித்து வந்தார் மம்தா. இதற்கிடையே எல்லா விதமான வெற்றிக் கொண்டாட்டங்களையும் தடைசெய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. மம்தா போட்டியிடும் பவானிபூர் இடைத் தேர்தல் - 3 மணி நிலவரம்

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத் தேர்தலில் வெவ்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், 3 மணி நிலவரம்:

    மம்தா பானர்ஜி - திரிணமூல் - 63,314

    பிரியங்கா திப்ரேவால் - பாஜக - 20,576

    ஸ்ரீஜீவ் பிஸ்வாஸ்- மார்க்சிஸ்ட் - 2529

  6. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கை பயணம்

    இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ வர்தன ஷ்ரிங்லா இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று,(02) மாலை இலங்கை சென்றடைந்தார்.

    இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல்( ஓய்வு) பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேயின் அழைப்பிற்கு அமையவே, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றார்.

    இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர், எதிர்வரும் 5ம் தேதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

    ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை அவர் சந்திப்பார் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகின்றது. இன்று அவர் கண்டிக்கு பயணம் சென்றுள்ளார்.

    வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு (பெளத்த விஹாரை) இன்று முற்பகல் சென்ற அவர், அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

    அடுத்து, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ வர்தன ஷ்ரிங்லா, பதவியேற்றதன் பின்னர், இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

  7. தொடர்ந்து மம்தா முன்னிலை - 1.30 நிலவரம்

    மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி அபார முன்னிலையைத் தொடர்கிறார்.

    வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்தே அவர் பெற்றுவரும் முன்னிலை மிக அதிகமாக இருக்கிறது.

    ஆனால், தொடக்கத்தில் அவர் பெற்றுவந்த வாக்கு சதவீதம் 80க்கு மேல் இருந்தது இப்போது அது சுமார் 75 ஆக உள்ளது.

    பகல் 1.30 நிலவரப்படி முன்னணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

    மம்தா பானர்ஜி - திரிணமூல்- 45,894 (75.83%)

    பிரியங்கா திப்ரேவால் - பாஜக - 11,892 (19.65%)

    ஸ்ரீஜீவ் பிஸ்வாஸ் - மார்க்சிஸ்ட் - 1,515 (2.5%).

    முன்னணி நிலவரம்.

    பட மூலாதாரம், ECI

    படக்குறிப்பு, முன்னணி நிலவரம்.
  8. 82 சதவீத வாக்குகளை பெறும் மம்தா பானர்ஜி

    மம்தா பானர்ஜி

    பட மூலாதாரம், Mamta Banerjee

    படக்குறிப்பு, மம்தா பானர்ஜி

    மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலமைச்சரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருமான மம்தா பானர்ஜி முன்னிலை வகிப்பது மட்டுமல்ல, எண்ணப்பட்ட வாக்குகளில் அவர் மட்டுமே சுமார் 82 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை பகல் 12.15 மணி அளவில், தேர்தல் ஆணையத் தகவல்படி

    மம்தா 31,033 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது எண்ணிய வாக்குகளில் 81.82 சதவீதம் ஆகும்.

    அவருக்கு அடுத்தபடியாக வரும் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 5,719வாக்குகளைப் பெற்றுள்ளார். இது 15.08 சதவீதம் ஆகும்.

    34 ஆண்டுகள் மாநிலத்தை தொடர்ந்து ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஸ்ரீஜீவ் பிஸ்வாஸ் வெறும் 527 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாமிடத்தில் உள்ளார். இது எண்ணிய வாக்குகளில் 1.39 சதவீதம் ஆகும்.

    முன்னிலை நிலவரம்.

    பட மூலாதாரம், தேர்தல் ஆணையம்

    படக்குறிப்பு, முன்னிலை நிலவரம்.
  9. 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கேரள மாவட்டமானது எர்ணாகுளம்

    இந்தியாவிலேயே தற்போதைய நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் மாநிலமான கேரளாவில், எர்ணாகுளம் மாவட்டத்தில் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் பி ராஜீவ் கூறியுள்ளார்.

    எனவே கேரளாவிலேயே 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் மாவட்டம் என்கிற பெருமையைப் பெறுகிறது எர்ணாகுளம்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. பிரேசில் அதிபர் போல்சனோரூ-வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்

    பிரேசில் அதிபரும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமான உலகத் தலைவர்களில் ஒருவருமான சயீர் போல்சனாரூவுக்கு எதிராக அந்நாடு முழுவதும் பரவலான போராட்டங்கள் நடந்தன.

    நேற்று (அக்டோபர் 02, சனிக்கிழமை) 160க்கும் மேற்பட்ட நகரங்களில், அந்நாட்டின் அதிபர் சயீர் போல்சனாரூ-வுக்கு எதிராகவும், அவரை பதவி நீக்க வலியுறுத்தியும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டங்களை பிரேசில் எதிர்கட்சிகளும், வணிகர் சங்கங்களும் இணைந்து நடத்தின.

    அந்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் சயீர் போல்சனாரோ தற்போது பின்தங்கியுள்ளார். பிரேசில் மக்களில் பலரும், அதிபர், கொரொனா வைரஸ் பெருந்தொற்று பிரச்சனையை சரியாக சமாளிக்கவில்லை என்கிற அதிருப்தியில் இருக்கின்றனர்.

    பிரேசிலில் இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். “இந்த அதிபர் உலகின் பிற்போக்குத்தனமான எல்லா விஷயங்களையும் பிரதிபலிக்கிறார். இங்கு பசி, வறுமை, ஊழல் என எல்லாமே இருக்கின்றன. நாங்கள் ஜனநாயகத்தைக் காக்க இங்கு கூடியுள்ளோம்” என போராட்டக்காரர்களில் ஒருவரான வால்டோ ஒலிவேரியா ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

  11. அபார முன்னிலையை தொடரும் மம்தா

    மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 11.20 மணி நிலவரம்-

    மம்தா பானர்ஜி - திரிணமூல்- 16,397

    பிரியங்கா திப்ரேவால் - பாஜக - 3962

    ஸ்ரீஜீவ் பிஸ்வாஸ் - மார்க்சிஸ்ட் - 315

  12. பவானிபூர் இடைத்தேர்தல் - மம்தா பானர்ஜி முன்னிலை

    மம்தா பானர்ஜி

    பட மூலாதாரம், Mamta Banarjee

    படக்குறிப்பு, மம்தா பானர்ஜி

    மேற்குவங்க மாநிலம் பவானிபூர், ஜாங்கிபூர், சம்சேர்கன்ச் ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    பவானிபூரில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி தமது பாஜக போட்டியாளரை விட முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைய தளத்தில் காலை 10.40 மணி அளவில் காணப்பட்ட தகவல்படி, மம்தா பானர்ஜி 5,333 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 2,956 வாக்குகளும், மூன்றாம் இடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஸ்ரீஜீவ் பிஸ்வாஸ் 132 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்றப் பொது தேர்தலில் தமது முன்னாள் தளபதியும் பிறகு பாஜகவுக்கு தாவியவருமான சுவேந்து அதிகாரியை எதிர்த்து, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு மயிரிழையில் வெற்றியை தவறவிட்டார் மம்தா.

    ஆனால், மம்தாவின் கட்சி மாநிலத்தில் அபார வெற்றி பெற்றது. பாஜக படுதோல்வி அடைந்தது. அதனால், சட்டமன்ற உறுப்பினராகவே இல்லாமல் முதல்வரானார் அவர்.

    இந்நிலையில் முதல்வர் பதவியில் தொடர்வதற்கு அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆவது அவசியம் என்ற நிலையில், தாம் வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூரில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட்டார் மம்தா.

  13. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலைக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய இன்றைய செய்திகளை இந்தப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், கௌதமன் முராரி.