ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 10.5 மெட்ரிக் ஆக்சிஜன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்இருந்துபுதன்கிழமை மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்சிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு,மேற்படி ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புதன்கிழமை மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. இதில்,6.50 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி,மருத்துவமனைக்கும்,4.00 மெட்ரிக் டன் பெராக்கா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ReplyForward





