You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தொற்றுடன் கேரளா போராடுவது எப்படி: ஷைலஜா டீச்சர் பேட்டி
ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பும் நேரத்தில், கேரளாவில் கொரோனா வைரஸின் கிளஸ்டர் பரவல் தீவிரமாக அதிகரித்துள்ளது என கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.
திருமண வீடுகள், இறப்பு வீடுகள், தொழிற்சாலைகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில், சமூக இடைவெளி பின்பற்றப்படாததால், கேரளாவில் பெருமளவு கிளஸ்ட்டர் பரவல் தீவரமாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஜனவரி மாதத்தில் கேரளாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் மூன்றாக இருந்தது. தற்போது அக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக ஊரடங்கு தளர்வுக்கு பின்னர்தான் தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில், பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின்போது, கிளஸ்டர் பரவல் எவ்வாறு பாதிப்பை கூட்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் விளக்கினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: