You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாத்துகளுக்கு பறக்க கற்றுத்தரும் காஷ்மீர் இளைஞர்
சிறுவயதிலிருந்தே வாத்துகளை வளர்த்துவரும் ஷோகத் அலி அவற்றிற்கு பறக்க கற்றுத் தருகிறார்.
ஸ்ரீநகரின் பெமினாவில் வசித்து தரும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வாத்துகளை வளர்த்து வருகிறார். வீட்டு வளர்ப்பால் பறக்கும் தன்மையை மறந்து போன வாத்துகளுக்கு பயிற்சி மூலம் பறக்க கற்றுத்தருகிறார் இவர்.
இதுகுறித்து பேசிய அவர், “பயிற்சி செயல்முறையில் முதலில் எந்த வாத்து பறக்கும் திறன் கொண்டது என்பதை மதிப்பிட வேண்டும். பறக்கும் திறன் கொண்டவற்றை தனியாக பிரித்து, படிப்படியாக அவற்றிற்கு பயிற்சி அளிக்கிறோம். முதல் நாளில், பயத்தின் காரணமாக, அவற்றால் சில அங்குலங்கள் மட்டுமே பறக்க முடிந்தது. பின்னர் நாங்கள் இறக்கை பயிற்சிகளோடு தொடங்கினோம், நேரம் செல்லச் செல்ல, அவை பறக்கும் உயரம் அதிகரித்தது. இன்று, அல்லாஹ்வின் கிருபையால், அவற்றால் ஆற்றிலிருந்து நேரடியாக கணிசமான உயரத்திற்கு பறக்க முடியும். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக அவை எதுவும் நடந்து ஆற்றுக்குள் செல்லவில்லை. பறந்தே செல்கின்றன” என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)