சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதால் அபராதம் - மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதால் அபராதம் - மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

சமூக ஊடகத்திற்காக காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே வீடியோவை பதிவு செய்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அந்த நேரத்தில் கார் பயணத்தின்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

42 வயதான அவருக்கு நிலையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக லன்காஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.

“இதுவொரு தவறு என்பதை முழுமையாக ரிஷி சுனக் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்றும் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது. மேலும் அபராதத்தையும் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: