You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எம்எச்17 விமான விபத்து: 10 ஆண்டுகள் கழித்தும் நீடிக்கும் மர்மம்
ஜூலை 17, 2014 அன்று மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் (MH17) ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பற்றிய நான்கு முக்கிய கேள்விகள் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது வரை பதிலளிக்கப்படவில்லை.
'எம்எச் 17' விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, யுக்ரேனின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதியில் ஏவுகணையால் தாக்கப்பட்டது, அந்த நேரத்தில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த கிளர்ச்சியாளர் குழுக்களுக்கும் யுக்ரேனிய ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தில் 80 குழந்தைகள் உட்பட 283 பயணிகள் மற்றும் 15 பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து டச்சு அதிகாரிகள் குற்றவியல் விசாரணையைத் தொடங்கினர் மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு சாட்சியங்களை நேர்காணல் செய்தனர். நூற்றுக்கணக்கான ஆதாரங்களை ஆய்வு செய்தனர். விபத்திற்கு ரஷ்யா பொறுப்பேற்க முடியாது என்று மறுத்தது, ஆனால் புலனாய்வாளர்கள் ரஷ்ய அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருப்பதை கண்டறிந்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)