You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்கி 2898 AD: படம் எப்படி இருக்கிறது? - ஊடக விமர்சனம்
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27, வியாழக்கிழமை வெளியாகியுள்ளது. ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.
மகாபாரத கதையின் கருவும் கதாபாத்திரங்களும் இந்தப் படத்துக்கு அடித்தளமாக உள்ளன. எதிர்காலத்தையும் புராணக் கதைகளையும் இணைத்து, முன்னும் பின்னுமாக கதை நகர்கிறது. அதாவது மகாபாரத கதைக்கு ‘கல்கி 2898 ஏடி’ ஒரு சீக்வெல் (தொடர்ச்சி) என்று சொல்லலாம்.
குருக்ஷேத்திர போரிலிருந்து படம் தொடங்குகிறது. போர் முடிந்து 6000 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தப் படம் காட்சிப்படுத்தியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)