You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாட்டிறைச்சி சர்ச்சை: மும்பை ரயிலில் முதியவர் மீது தாக்குதல் - நடந்தது என்ன?
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரப் தனது மகளை பார்க்க தானே மாவட்டத்தில் உள்ள கல்யான் பகுதிக்கு பயணம் மேற்கொண்டபோது மோசமான சம்பவம் ஒன்று நடந்தது.
ஆகஸ்டு 28 ஆம் தேதி அவர் மாட்டுக்கறி கொண்டு செல்கிறார் என்று கூறி கும்பல் ஒன்று அவரை ரயிலில் தாக்கியது. மாட்டுக்கறி கொண்டு செல்வதாக சந்தேகித்த ஆறு சக பயணிகள் மிக மோசமாக பேசி அவரை தாக்கினர். இவர்கள் மீது மத நம்பிக்கையை புண்படுத்தியது, திருட்டு, கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)