வணக்கம் நேயர்களே!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
இன்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய செய்திகள்:
- ரஷ்யாவில் பிரபல நிறுவனங்களான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர், பர்கர் கிங், மேரியட் ஹோட்டல் குழுமம், அக்கார் ஆகியவை சிக்கலான ஒப்பந்தங்களால் தங்களின் கிளைகளை மூட முடியாமல் இருக்கின்றன.
- மேலூர் அருகே, விவசாயம் செழிக்க வேண்டியும், சாதி, மத பேதமின்றி கிராம மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும்நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல வகையான நாட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
- திமுக ஆட்சியைப் பிடித்ததுபோல, தேமுதிகவும் ஒருநாள் ஆட்சிக்கு வரும் என, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
- யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரை ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று கைதட்டி வரவேற்றனர். 10 நிமிடங்கள் மட்டுமே அவர் உரையாற்றினாலும், கூர்மையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.
- மேரியோபோல் அரங்கத்தில் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டினார். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது.
- விராலிமலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் ஐ.ஜி., உத்தரவின்படி, விராலிமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.