தமிழ்நாட்டில் தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 14ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 16ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள்
நடத்தப்படவுள்ளது.
இதையடுத்து, வாடிவாசல்கள் வண்ணம் தீட்டப்படுவது. பார்வையாளர் மாடம், வீரர்கள், காளைகள் பரிசோதனை மையம், மருத்துவசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காளைகளுக்கு பரிசோதனை செய்து,
அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புகழ்பெற்ற அலங்காநல்லூரில்
ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்வு இன்று காலை, நடைபெற்றது. இதற்காக, வாடிவாசல் அருகே முத்தாலம்மன் கோயில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அரசு வழிகாட்டுதல்படி, ஜல்லிக்கடை நடத்துவோம் என்று கிராமக் கமிட்டியினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு
வணிகரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளார்களிடம் கூறுகையில், ‘’கொரோனா பரவல் தடுப்பு
பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளோடு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம்
நடைபெறும். இதற்கான வழிகாட்டுதல்களை முதலமைச்சர் இன்று வெளியிடுவார். ‘’ என்றார்.