|
இலங்கை தலித்துகள் பற்றிய பாரிஸ் சந்திப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கைத் தலித்துக்களின் பிரச்சினைகள் குறிது ஆராயும் சந்திப்பு ஒன்று அண்மையில் பிரான்ஸ் நாட்டில் நடந்தது. இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி என்னும் அமைப்பினர் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். பாரீஸ் நகரின் சர்செல் பகுதியில் நடந்த இந்தச் சந்திப்பில், இலங்கையில் உள்ள தலித்துகள், தாம் வாழும் பகுதிகளிலும், புலம்பெயர் மண்ணிலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது. பல்லாண்டுகாலமாக இலங்கையில் சாதி கட்டமைப்பு காரணமாக புறக்கணிக்கப்பட்டுவரும் தலித்துக்களின் பிரச்சினையை தற்போது அங்கு மேற்கொள்ளப்படுகின்ற போராட்டத்தினால் தீர்க்கமுடியாது என்று அங்கு கலந்துகொண்ட பலர் கருத்து தெரிவித்தினர். தலித்துக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பல வழிமுறைகள் குறித்தும் அவர்கள் அங்கு ஆராய்ந்தனர். இவை குறித்து பூபாலரட்ணம் சீவகன் தயாரித்து வழங்கும் சிறப்புப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம். | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||