You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன அரசை மீறி இளைஞர் கட்டிய 10 மாடி வீடு சுற்றுலா தலமாக மாறியது எப்படி?
அரசின் உத்தரவை மீறி கட்டப்பட்ட 10 மாடி வீடு, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த கிராமத்தை 2018இல் லாபகரமான சுற்றுலா ரிசார்ட்டாக மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டனர்.
மக்கள் காலி செய்த பிறகு பிற வீடுகள் இடிக்கப்பட்டன. ஆனால் சென் டியாமிங் அங்கேயே தங்கினார். அவர் அங்கிருந்து காலி செய்ய மறுத்தார். அதோடு, அவரது தாத்தா கட்டிய சிறிய கல் பங்களாவை தொடர்ந்து விரிவு படுத்திக்கொண்டே இருந்தார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "முன்பு, அதைக் கட்டி முடிப்பதே என் கனவாக இருந்தது. இப்போது அதைப் பாதுகாக்கிறேன். இது என் பொறுப்பு, என் கனவு. முதலில் அதை நிலையாக வைத்து, புயல், மழையில் சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், அதை பிறர் சேதப்படுத்தி விடாமலும் நான் பாதுகாக்க வேண்டும்" என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு