You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரண தண்டனையில் இருந்து தப்பிக்க 9 பில்லியன் டாலர்கள் தேவை - யார் இந்த ட்ரோங் மை லான்?
9 பில்லியன் டாலர்கள் இருந்தால் இந்த பெண் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். யார் இவர்? அவர் செய்த மோசடி என்ன?
வியட்நாமை சேர்ந்த ட்ரோங் மை லான் தான் அவர். அந்நாட்டின் முக்கிய வங்கி ஒன்றில் மறைமுகமாக செல்வாக்கு செலுத்திய ட்ரோங், ஷெல் நிறுவனங்கள் மூலம் 44 பில்லியன் டாலர் கடனை பெற்றிருக்கிறார்.
இதில் 27 பில்லியன் டாலர்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், 12 பில்லியன் டாலர்கள் கையாடல் செய்யப்பட்டதாகவும் இந்த மோசடி குறித்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
ட்ரோங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வியட்நாம் சட்டத்தின்படி, அவர் கையாடல் செய்த தொகையில் 74 சதவிகிதம் அதாவது 9 பில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்தினால், மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)