You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆமதாபாத் விமான விபத்து: துணை விமானிக்கு கண்ணீருடன் பிரியாவிடை தந்த பொதுமக்கள்
ஆமதாபாத் விமான விபத்து: துணை விமானிக்கு கண்ணீருடன் பிரியாவிடை தந்த பொதுமக்கள்
ஜூன் 12-ஆம் தேதி அன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த பணியாளர்கள், விமானிகள், பயணிகள் உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தரும் இறந்தவர்களில் ஒருவர். அவரின் இறுதிச் சடங்கு மும்பையில் ஜூன் 19 அன்று நடைபெற்றது. அதில் அவரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக் கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
கண்ணீருடன் அவர்கள் பிரியாவிடை தரும் காட்சி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு